தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த 11 கட்சிகள் ஆதரவு – அரசின் முடிவு என்ன?
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து இன்று நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அதிமுக உட்பட 11 கட்சிகள் தேர்வினை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த நிலையில், பல மாநில கல்வி வாரியங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு குறித்த முடிவுகள் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி? அதிகாரிகள் விளக்கம்!
இதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் கருத்துக்களை பெற்றுள்ள நிலையில், இன்று தலைமை செயலகத்தில் கல்வி அலுவலர்கள், கல்வியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தையும் அமைச்சர் கேட்டறிந்தார். தற்போது, தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் கலந்து கொண்டார். தமிழகத்தில் தேர்வு நடத்துவதற்கு அதிமுக, திமுக உட்பட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.