தமிழகத்தில் ரெயில், விமான நிலையங்கள் செல்ல இ-பதிவு அவசியம் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் இன்று காலை முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு இ-பதிவு குறித்த உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இ-பதிவு அவசியம்:
தமிழகத்தில் இன்று (மே 31) உடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால் அரசு தளர்வுகளற்ற ஊரடங்கினை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படும் என்று உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளை மட்டுமே தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் ஜூன் 6 வரை வங்கிகள் வேலை நேரம் குறைப்பு – முழு ஊரடங்கு எதிரொலி!
அதன்படி மக்களின் அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி போன்றவற்றினை அவர்கள் இல்லங்களில் நேரடியாக கிடைப்பதற்கான வழிவகையை தமிழக அரசு செய்துள்ளது. தற்போது தமிழக அரசு இ-பதிவு குறித்த அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ஊரடங்கு காலத்தில் ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் இ-பதிவு கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
வீடுகளில் இருந்து ரயில், விமான நிலையங்களுக்கு செல்பவர்களும் அல்லது விமான, ரயில் நிலையங்களில் இருந்து இல்லங்களுக்கு திரும்புபவர்களும் கட்டாயம் இ-பதிவு பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இ-பதிவில் பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டை கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Who can go to other places ie other state/district, the person already booked confirm ticket. Then why do you want to fill e-pass for residency to railway station/airport’s. If someone relatives or auto to drop station/airport what is necessary to get e-pass. It is more complicated.