ஒரே கல்வியாண்டில் 2 பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் – உயர் நீதிமன்றம் மறுப்பு!!
தொலைதூரக்கல்வி மூலம் ஒரே கல்வியாண்டில் 2 பட்டப்படிப்புகளை அங்கீகரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரு பட்டப்படிப்பு
கல்லூரிகளில் நேரடியாக பட்டப்படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு தொலைதூரக்கல்வி ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் எந்த வயதிலும் தாங்கள் விரும்பும் பட்டப்படிப்பை ஒருவர் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அந்த வகையில் தொலைதூரக்கல்வி மூலம் பலர் படித்து பயனடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த கல்வி முறையில் ஒருவர் எத்தனை பட்டப்படிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் திட்டம் – மத்திய அரசு பாராட்டு!!
இந்த நிலையில் தொலைதூர கல்வி மூலம் ஒருவர் ஒரே கல்வியாண்டில் பெற்ற 2 பட்டப்படிப்புகளை அங்கீகரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகள் முன்னிலையில் இன்று (மே 21) விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது, ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டப்படிப்புகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பை அங்கீகரிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் UGC தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில், ஒரே கல்வியாண்டில் ஒருவர் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்காத வரையில், அதனை அங்கீகரிக்க முடியாது என உத்தரவு அளிக்கப்பட்டது. மேலும் தொலைதூரக்கல்வி மூலம் படிப்பவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் அனுபவம் இருக்காது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.