மாநிலத்தில் வேளாண் துறையில் 9000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!
பீகார் மாநிலத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலைகளில் 9,000 பேருக்கு மாநில அரசு விரைவில் வேலை வழங்கும் என மாநில வேளாண் அமைச்சர் குமார் சர்வ்ஜீத் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
பீகார் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (BAU) பட்டமளிப்பு விழாவில் மாநில வேளாண் அமைச்சர் குமார் சர்வ்ஜீத் கலந்து கொண்ட நிலையில் அதில் இறந்த ஊழியர்களின் 14 உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர் வேளாண் துறையில் பல்வேறு நிலைகளில் 9,000 பேருக்கு மாநில அரசு விரைவில் வேலை வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த வழிமுறைகளை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசு தயாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடுக்காக முயற்சி – தமிழக முதல்வர் பேட்டி!
மேலும் பீகாரில் ‘வனவியல் மற்றும் வேளாண் வணிகம்’ என்ற தலைப்பில் புதிய கல்லூரி தொடங்குவது குறித்து தெரிவித்த அவர், பீகாரில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடி சிறந்த விவசாய விளைச்சலுக்காக அரசு முதலீடு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சமூக-பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான குறைந்த விலை விவசாய நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download