அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு – கூடிய விரைவில் இரட்டிப்பு சம்பளம்!
மத்திய ஊழியர்களுக்கான எட்டாவது ஊதியக்குழு குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் இதனால் ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
8 ஆவது ஊதியக் குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் மூலமாக அகவிலைப்படி மற்றும் பிற ஊதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழு கமிஷனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், 2024ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக்குழு அமைக்கப்படும் என பேச்சு வார்த்தை எழுந்த நிலையில் தற்போது வரைக்கும் எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – நாளை முதல் விநியோகம்!
மேலும், கூடிய விரைவில் எட்டாவது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஏழாவது ஊதிய குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணி 2.57மடங்காக இருந்த நிலையில் தற்போது எட்டாவது ஊதிய குழுவில் ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்காக அதிகரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பல மடங்காக அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது