இந்தியாவில் ரூ.70,000 கோடி செலவில் பாதுகாப்பு படை ஆயுதங்கள் – மத்திய அமைச்சகம் ஒப்புதல்!
இந்தியாவில் பாதுகாப்பு படைகளுக்கு ரூ. 70,000 கோடி செலவில் பல்வேறு ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இது குறித்து முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
பாதுகாப்பு படை
இந்திய பாதுகாப்பு படைகளான ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு பல முக்கிய தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பல பரிசோதனைகளை மேற்கொண்டு ரூ. 70000 கோடி மதிப்பில் பல கொள்முதல்களை உறுதி செய்து இருக்கிறது. அதில் கடற்படைக்கு ரூ. 32000 கோடி செலவில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயார் செய்யப்படும்.
அதே போல சோனிக் ஏவுகணைகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்ஸர்கள் பீரங்கிகள், கடலோரக்காவல் படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் தயாரிக்க முயற்சியை இந்த குழு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download