தமிழக ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அவ்வாறு அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மே 10 வரை கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல் – அரசு பரிசீலிக்க உத்தரவு!
இதன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டாலும், முக்கிய மாவட்டங்களுக்கு இடையே ரயில் சேவைகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. மேலும் முன்பதிவு மூலமாக மட்டும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் ரயில் நிலையங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அவ்வாறு அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்களுக்கு ரயிலில் பயணிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் Non-Peak Hours-ல் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.