கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு – இஸ்ரேல் போர் எதிரொலி!
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் அதிகமாகி போர் சூழல் நிலவுகிறது. அதனால் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
விலை உயர்வு
பல ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சண்டையிட்டு வருகிறது. தற்போது நிலைமை மோசமாகி போர் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலஸ்தினத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 7ம் தேதி காலை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
தமிழகத்தில் நாளை (அக்.10) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. அதனால் மூன்றாவது நாளாக இரு தரப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. அதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் அக். 6ம் தேதி 84.58 டாலராக இருந்த ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை இன்று 89 டாலராக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.