பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு – மசோதா இன்று தாக்கல்!
இந்தியாவில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை இன்று அரசு தாக்கல் செய்ய உள்ளது.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
இந்தியாவில் கடந்த 2010ம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனை தொடர்ந்து சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மக்களவையில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் தற்போது வரை மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவி வருகிறது. தற்போது இதனை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.6000/- நிவாரணம் – அரசிடம் கோரிக்கை!
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து வரவேற்பும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சட்டத்தை முதன் முதலாக காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தும் வகையிலான அவசர சட்டம் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.