நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3000 பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு வெளியாகும்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
மத்திய மற்றும் மாநில அரசு ஆனது தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 3 வது நாளான இன்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரத்தை எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு – முழு விவரங்களுடன்!
அதனை தொடர்ந்து பேசுகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3000 பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார். எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அதில் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதிய விவரம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது தெரிவிக்கப்படும்.