இந்தியாவில் கொரோனா 3ம் அலை எப்போது? ஆய்வாளர்கள் கணிப்பு!!
இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கத்தின் 2ம் அலை குறைந்து வருகின்றது. ஆனால், இதற்கு அடுத்ததாக இந்த நோய் பரவலின் 3ம் அலை வரும் நவம்பர் மாதத்திற்குள் தாக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தற்போது கொரோனா 2ம் அலை பரவி வருகின்றது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகளை விட இந்த 2ம் அலை மக்களை பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த நோய் தாக்கத்தில் ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த அலையினை தொடர்ந்து கொரோனா 3ம் அலை இந்தியாவில் பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியாக இருக்க, இந்த 3ம் அலை குழந்தைகளை தான் அதிகமாக தாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது இப்படியாக இருந்தாலும் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் 3ம் அலை மூலமாக பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதே போல் மூன்றாம் அலை கொரோனா வைரஸ் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சத்தினை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த 3அலை தாக்கத்தின் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.