தமிழகத்தில் அதிரடியாக மூடப்படும் 275 டாஸ்மாக் கடைகள் – அரசு ஆலோசனை!
தமிழகத்தில் 275 டாஸ்மாக் கடைகள் குறித்து புகார்கள் பெறப்பட்டதை அடுத்து இந்த கடைகளை மூடுவதற்கு அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மார்க் கடைகள் மூடல்:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், அரசு தரப்பு புதிதாக டாஸ்மார்க் கடைகள் திறக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், படிப்படியாக டாஸ்மார்க் கடைகளின் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இக்கடைகள் குறித்து எழுந்த புகார்களை அடுத்து மூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. தற்போது அதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள 275 டாஸ்மார்க் கடைகள் மூலம் ஏற்படும் இடையூறுகள் குறித்து பொதுமக்கள் அரசுக்கு புகார் அளித்தனர். அரசுக்கு வந்த புகார்களை ஆய்வுகள் செய்து விசாரணை நடத்தி முடிவெடுக்க கலால் துறை அதிகாரிகளை நியமித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் வாங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வர வேண்டும்? அமைச்சர் விளக்கம்!
புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் இந்த மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.