தமிழகத்தில் நவ.28ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 200+ நிறுவனங்கள் பங்கேற்பு!
அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அம்மாவட்டத்தில் உள்ள தத்தனூர் மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.11.2021 அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்குடன் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு தடை விதித்தது. மேலும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவால் தனியார் நிறுவனங்கள் புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் ஏராளமானோர் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினி ஹரிப்ரியன் ரீஎன்ட்ரி? TRP ரேட்டிங் சரிவால் ரசிகர்களின் கோரிக்கை!
இந்த நிலையில் அரசு கொரோனா பரவல் குறைந்தவுடன் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தவும் அனுமதி வழங்கியது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற தொடங்கியது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நவம்பர் 28ம் தேதி அன்று அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாகவும், ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பாகவும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் பிரபலம் ஜெனிபருக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த முகாமில் திருச்சி, சென்னை, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளனர். எனவே வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற்று பயனடையலாம். இந்த முகாமில் நடைபெறும் வேலைவாய்ப்பு நேர்காணலில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு மாநில பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர், மக்களவை தொகுதி உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளனர்.