மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 18 மாத DA நிலுவைத்தொகை? ரூ.2 லட்சம் வரவு!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வை பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட இருக்கிறது.
DA நிலுவைத்தொகை
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் புத்தாண்டு பரிசாக பம்பர் தொகை கிடைக்கும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவை தொகையை விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக, அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து மத்திய அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்போது 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகையை வழங்கினால், பல அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் வரவு வைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், பேருந்துகள் நிறுத்தம் – பொதுமக்கள் அவதி!
இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் செலவினத் துறை அதிகாரிகளுடன் DA நிலுவைத் தொகையை மொத்தமாக வழங்குவது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இப்படி நடந்தால் லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரை இருக்கும். அதே நேரத்தில், லெவல்-13 ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் தற்செயல் விடுமுறை – அரசாணை வெளியீடு!
மறுபுறம், மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவைத்தொகையுடன் அவர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது, அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத DA வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது 34 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, HRA விகிதங்களில் நகர்ப்புற வகையின்படி 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற அடிப்படையில் கிடைக்கிறது. இப்போது அகவிலைப்படி (DA) 34% ஆக அதிகரித்தால் HRA தொகையின் அடுத்த திருத்தம் 3 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.