144 தடை உத்தரவுடன் ஜூன் 21 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவின் படி கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவின் படி ஜூன் 21 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் 4 பேருக்கு மேல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் தொடக்கம்? வெளியான தகவல்!
கடந்த ஒரு மாதமாக 19 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அந்த மாநிலங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து தொழில் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டுமான நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுள்ளது. சிமென்ட், எஃகு போன்ற கட்டுமான நடவடிக்கைகளுக்குத் தேவையான கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பூங்காக்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தெருக்களில் விற்பனையாளர்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்கள் தொழிலை செய்யலாம் எனவும், ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் அதிகபட்சம் இரண்டு பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹோட்டல் மற்றும் உணவகங்கள் தொடர்ந்து பார்சல் சேவை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி வரை பார்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.