LPG சிலிண்டருக்கான மானியமாக ரூ.11,896 கோடி வழங்கல் – ஒன்றிய அரசு தகவல்!
இந்தியாவில் 2020-21 ம் நிதியாண்டில் சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.11,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரமேஷ்வர் டெலியின் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் அவர்கள் பதிலளித்துள்ளார்.
சிலிண்டர் மானியம் :
இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து உயரும் எரிவாயு சிலிண்டர்களின் விலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் காலங்களில் ஒரு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் நாம் வாங்கும் சிலிண்டர் மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மானிய தொகை சரியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – சென்னை காவல்துறை அறிவிப்பு!
அதிக விலை ஏற்றப்பட்ட போதிலும் சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் மணியத்தொகை குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஏழை எளிய மக்கள் கேஸ் சிலிண்டர்கள் வாங்க இயலாத நிலை உருவாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் எல்பிஜி இணைப்பு குறித்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவில் 2020-21 ம் நிதியாண்டில் சமையல் சிலிண்டருக்கான மானியம் ரூ.11,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரமேஷ்வர் டெலி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 2020-2021ம் நிதியாண்டில் 11,896 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் 29.95 சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர் எனவும் அதில் 1.08 கோடி பேர் மானியத்தை விட்டு கொடுத்துள்ளதாகவும் மத்திய ரமேஷ்வர் டெலி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் அவர்களுக்கு பதிலளித்துள்ளார்.