தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – இன்று முதல் அமல்!
தமிழகத்தில் வன்னியர் பிரிவு மக்களுகான 10.5% இட ஒதுக்கீடு இன்று முதல் அமலானது. MBC பிரிவு தற்போது மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும் அதனுடன் தொடர்புடைய வன்னியர் சங்க அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தன. இது குறித்து பேசிய முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரிவாக ஆய்வு நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக UG, PG தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!
அதன்படி தமிழக முதல்வர் வரும் பிப்ரவரி மாதம் முதல் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என கூறினார். ஆனால் தற்போது இன்று முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% சிறப்பு இடஒதுக்கீடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது வன்னியர் பிரிவு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியினர் அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இன்று MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. நேற்று பதிவு செய்த வன்னியர் பிரிவு மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் MBC பிரிவை மூன்றாக பிரித்து மொத்தம் 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினர்களுக்கு 7%, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% என வகைப்படுத்தப்பட்டுள்ளது.