10 நாட்கள் அரையாண்டு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!
பள்ளி மாணவர்களுக்கு டிச.22 ஆம் தேதியுடன் அரையாண்டுத்தேர்வுகள் முடிவடையும் நிலையில் 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் டிச.11 ஆம் தேதி தான் திறக்கப்பட்டது. இதனால், மாணவர்களின் நலன் கருதி இரண்டாவது முறையாக அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று முதல் அரையாண்டுத்தேர்வு துவங்குகிறது.
தமிழகத்தில் நாளை (டிச.14) முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரங்கள் வெளியீடு!
மேலும், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.