மத்திய அரசு துறையில் 1.14 லட்சம் காலிப்பணியிடங்கள் – அமைச்சகம் வெளியிட்ட தகவல்!
மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் ஆயுதப்படை மற்றும் டெல்லி போலீஸ் பிரிவுகளில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டு உள்ளார்.
மாநிலங்களவை விவாதம்:
நாட்டில் மாநிலங்களவை குறித்த விவாதம் தற்போது நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் போது பல்வேறு கேள்விகளுக்குமான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் கலவரம் காரணமாக 14,763 பள்ளி குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும், இவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நிவாரண முகாம் நடந்து வருவதாகவும், இதன் பலனாக 93.5% குழந்தைகள் இலவசமாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி கூறினார்.
ICAI தேர்வு முடிவுகள் & தேர்வு தேதி அறிவிப்பு – அதிகாரபூர்வ அறிக்கை வெளியீடு!
அதனை தொடர்ந்து மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள சிஆர்பிஎஃப் போன்ற மத்திய ஆயுதப்படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய துறைகளில் ஒரு லட்சத்து 14,245 காலியிடங்கள் உள்ளதாகவும், நடப்பு ஆண்டில் 31,879 பணியிடங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, அவற்றில் 1126 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற பணியிடங்களுக்கான நியமனம் விரைவில் நடக்க உள்ளதாகவும் கூறினார்.