தமிழகத்தில் தொழில் நல்லுறவு விருது பெற அரசு அழைப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
தமிழக அரசு சார்பில் ‘தொழில் நல்லுறவு பரிசு திட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தொழில் நல்லுறவு விருது:
தமிழக அரசு சார்பில் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு ‘தொழில் நல்லுறவு பரிசு திட்டம்’ அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட இம்முத்தரப்புக்குழு தேர்வு செய்யும்.
அரசு ஊழியர்களுக்கு வெளியாக இருக்கும் ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி 4% வரை உயர்வு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த விருது பெற தகுதி உள்ளவர்கள் விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைத்தளமான http://www.labour.tn.gov.in என்பதில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு வருகிற 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும், தொழிற்சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250ம் கருவூல வலைத்தளமான https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan என்பதில் e-challan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்து சீட்டு வைத்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.