![இன்று முதல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்! இன்று முதல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/04/இன்று-முதல்-இலவச-ரேஷன்-பொருட்கள்-விநியோகம்-மாநில-768x576.jpg)
இன்று முதல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் இலவசமாக ரேஷன் உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலவச ரேஷன் பொருட்கள்:
மத்திய அரசு நாட்டில் திடீரென அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு அறிவிப்பிற்கு பிறகு, ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இலவச உணவு தானியங்களை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பிறகு இந்த திட்டம் முடிவிற்கு கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்தபோது, மீண்டும் இலவச உணவு தானியங்களை வழங்குமாறு மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
TNPSC மே மாத துறைசார் தேர்வு 2023 – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இதனால், டிசம்பர் 31, 2022 வரை கடைசியாக இந்த திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதற்காக அரசு பலகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதன்பிறகு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 (NFSA) ன் கீழ் ஜனவரி 1, 2023 முதல்,ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மார்ச் மாதத்திற்கான இலவச உணவு தானியங்கள் ஏப்ரல் 13ம் தேதியான இன்று முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் ரேஷன் கார்டின் மூலம் தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download