விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் – ஹீரோ, ஹீரோயின் இவுங்க தான்!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் முன்னணி நடிகர், நடிகைகளை கொண்டு புதிய சீரியல் ஒன்று களமிறங்க இருக்கிறது.
புதிய சீரியல்:
தமிழ் சினிமாக்களை விட சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல ஆதரவு உண்டு. காரணம் சினிமாவில் 2 மணி நேரத்தில் கதை முடிந்து கிளைமாக்ஸ் வந்து விடும். ஆனால் சீரியலில் அவ்வாறு இல்லை. அடுத்து என்ன நடக்கும் நடக்கும் என்ற விறுவிறுப்பே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சின்னத்திரையில் குறிப்பாக விஜய் டிவி சீரியல்கள் அனைத்துமே மக்களிடம் பிரபலமாக இருக்கின்றன. நாளுக்கு நாள் சீரியலில் நடைபெறும் ட்விஸ்ட் மற்றும் புதிய சீரியல்கள் அறிமுகம் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
‘தீபாவளியாக இருந்தாலும் எலிமினேஷன் உண்டு, கமல் அதிரடி ‘ – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!
இந்நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியல் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சீரியலில் ஏற்கனவே பல நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமான மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற நாயகனும் நாயகியும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த சீரியலை பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளார். அதனால் இந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை போல குடும்ப பின்னணியில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனது 2வது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த சீரியலில் சின்னத்தம்பி சீரியல் மூலம் பிரபலமான பிரஜன் பத்மநாபன் கதாநாயகனாகவும் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து சீரியல்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்த சரண்யா கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இதில் கதாநாயகி சரண்யாவின் அம்மாவாக ஏற்கனவே மக்களுக்கு பரிச்சயமான பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா அவர்கள் நடிக்க உள்ளார். ஏற்கனவே விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘தென்றல் வந்து என்னைத்தொடும்’ சீரியலுக்கு டப் கொடுக்க வைதேகி காத்திருந்தால் மற்றும் முத்தழகு போன்ற பல புதிய சீரியல்கள் போட்டி போட காத்திருக்கின்றன.