வந்தே பாரத் ரயில் சேவை இந்த தேதிகளில் இருந்து மாற்றம் – ரயில்வே அறிவிப்பு!
வந்தே பாரத் ரயில் சேவையை மார்ச் 11 ஆம் தேதி முதல் நேர மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கோவை முதல் பெங்களூரு வரை மார்ச் 11ஆம் தேதி முதல் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை அடையும் மறு மார்க்கத்தில் பெங்களூரு கண்டேன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும்.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்கள் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இந்த நேர மாற்றம் வரும் மார்ச் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே கோவை கே.எஸ்.ஆர் பெங்களூரு இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை தவிர இதர நாட்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையானது வரும் மார்ச் 5 ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.