![கோடை வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு – நீட்டிக்கப்படும் பள்ளி விடுமுறைகள்! கோடை வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு – நீட்டிக்கப்படும் பள்ளி விடுமுறைகள்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/06/Slide1-1-1-768x432.jpg)
கோடை வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு – நீட்டிக்கப்படும் பள்ளி விடுமுறைகள்!
வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தற்போது மேலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் நடப்பாண்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் மனிதர்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படும் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. இதனால் மாநில அரசுகள் தீவிர ஆலோசனைக்கு பின்னர் நிலவும் தட்பவெப்ப நிலைக்கேற்ப பள்ளிகளின் திறப்பை திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னதாக ஜூலை 15ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் ஜூலை 25ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் ஒரே நாளில் 2,81,503 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
ஆனால் தற்போது வரை கோடை வெப்பத்தின் தாக்கம் நீடித்து வருவதால் ஜூன் இரண்டாம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதே போல் பாட்னாவில் ஜூன் 28ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்னதாக பாட்னாவில் ஜூன் 25ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பிற்கான இந்த புதிய அறிவிப்பானது அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.