Home news தமிழகத்தில் தொடர் விடுமுறையால் பொதுத்தேர்வில் மாற்றம்? – அமைச்சர் விளக்கம்!! 

தமிழகத்தில் தொடர் விடுமுறையால் பொதுத்தேர்வில் மாற்றம்? – அமைச்சர் விளக்கம்!! 

0
தமிழகத்தில் தொடர் விடுமுறையால் பொதுத்தேர்வில் மாற்றம்? – அமைச்சர் விளக்கம்!! 
தமிழகத்தில் தொடர் விடுமுறையால் பொதுத்தேர்வில் மாற்றம்? - அமைச்சர் விளக்கம்!! 
தமிழகத்தில் தொடர் விடுமுறையால் பொதுத்தேர்வில் மாற்றம்? – அமைச்சர் விளக்கம்!!

தமிழக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டது. மேலும், வெள்ளத்தின் காரணத்தினால் அரையாண்டுத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதீத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அரையாண்டுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் தாறுமாறாக எகிறிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.46,680க்கு விற்பனை!!

இது போக, வெள்ளத்தில் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டுவிட்டதால் மாணவர்களுக்கு புதிய புத்தங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இந்த கனமழை, வெள்ளத்தால் பள்ளிகளுக்கு அதிகளவில் விடுமுறை விடப்பட்ட காரணத்தினால் பொதுத்தேர்வில் மாற்றம் இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஏற்கனவே அறிவித்த தேதியில் நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here