![ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிய வேண்டும் – தனியார் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிய வேண்டும் – தனியார் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/07/ஆன்லைனில்-மட்டுமே-விண்ணப்பம்-பதிய-வேண்டும்-தனியார்-கல்லூரிகளுக்கு-அதிரடி-உத்தரவு.jpg)
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிய வேண்டும் – தனியார் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் ஆனது தொடங்கி விட்டதனால் மாணவர்கள் கல்லூரிகளுக்கே சென்று விண்ணப்பபங்களை பெற்று வருகின்றன. வரும் ஜூலை 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதனால் அது வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கல்வி இயக்ககம் சார்பில் ஒரு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் செய்யப்படும் விண்ணப்பப் பதிவு ஆனது ஆன்லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், கல்லூரிகளில் விநியோகிக்க கூடாது எனவும் அறிவித்து உள்ளது.
இதனால் மாணவர்கள் ஆன்லைனில் மட்டுமே தனியார் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இயலும்.
[table id=1078 /]