அரசு ஊழியர்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம்- டிச.15 முதல் அமல்!!
ஒடிசா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் திருப்தியை அளிக்கும் பொருட்டு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
QMS 2.0:
ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் ஊழியர்களின் திருப்தியை மேம்படுத்தும் நோக்கில் QMS 2.0 என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் புதிய விண்ணப்பம், ஒதுக்கீடு, விடுமுறை மற்றும் நிலுவை தொகைகள் ஆகியவற்றில் ஏதேனும் குழப்பம் இருந்தால் இந்த திட்டத்தின் வாயிலாகவே சரிபடுத்திக்கொள்ளலாம்.
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு!
அதாவது, மாதந்தோறும் 1 முதல் 9 வரை கிடைக்கும் QMS 2.0 பணியாளர்கள் தங்கள் விருப்பத்தை https://qms.hrmsodisha.gov.in/ என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களின் வேலையை குறைக்கும் நோக்கமாக இந்த QMS 2.0 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 15ம் தேதி முதல் QMS 2.0 திட்டத்திற்கான பலனை பெறலாம்.