ஜூன் 22ம் தேதி நீலகிரி மற்றும் கோவையில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வானிலை மையம் ஆனது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 22ம் தேதி நீலகிரி மற்றும் கோவையில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.