![தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5% சம்பள உயர்வு – உடனடி அமல்! தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5% சம்பள உயர்வு – உடனடி அமல்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2024/02/Slide1-2-5-768x432.jpg)
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 5% சம்பள உயர்வு – உடனடி அமல்!
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஊதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
தமிழக பள்ளிக்கல்வி துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பு ஊதிய பணியாளர்கள் அனைவருக்கும் 1.2.2024 ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பயன்பெற முடியாது. இந்த அறிவிப்பின் மூலம் இத்திட்டத்தில் பணியாற்றி வரும் கணினி ஆய்வாளர், புரோகிராமர், சிவில் இன்ஜினியர்கள், கணக்குகள் மற்றும் தணிக்கை மேலாளர், எம் ஐ எஸ் ஒருங்கிணைப்பாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர், ஸ்வீப்பர், உதவியாளர்கள் போன்ற பணி பிரிவை சேர்ந்தவர்கள் பயன் பெற முடியும்.
தமிழகத்தில் 1251 மருத்துவர் காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்பம்!
1.2. 2023ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வானது பொருந்தும். மேலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான ஆலோசகர்கள், சிவில் ஆலோசகர்கள், உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் திட்ட இயக்குனர் இந்த அறிவிக்கைகளை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.