இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான Zydus Cadila தடுப்பூசி – ஒப்புதலுக்கு பரிந்துரை!

0
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான Zydus Cadila தடுப்பூசி - ஒப்புதலுக்கு பரிந்துரை!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான Zydus Cadila தடுப்பூசி - ஒப்புதலுக்கு பரிந்துரை!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான Zydus Cadila தடுப்பூசி – ஒப்புதலுக்கு பரிந்துரை!

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான அவசரகால பயன்பாட்டில் Zydus Cadila என்ற தடுப்பூசியை 3 டோஸ் அளவில் செலுத்த ஒப்புதல் அளிக்கும் படி இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் பொருள் நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் தற்போது கொரோனா அவசரகால பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய மருந்துகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வரும் இவ்வகை தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக 90% க்கும் அதிகமான நோய் எதிர்ப்பாற்றலை அளிப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதன் படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட இவ்வகை தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

செப்.4 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்நிலையில் ஜைடஸ் காடிலா தயாரித்துள்ள மூன்று டோஸ் கொண்ட கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு செயல்படுத்த அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் பொருள் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் Zydus தடுப்பூசியின் 2 டோஸ் விதிமுறைக்கு கூடுதல் தரவை சமர்ப்பிக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது. அதாவது காடிலா ஹெல்த்கேர் லிமிடெட் என பட்டியலிடப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டில் ZyCoV-D க்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என கடந்த ஜூலை 1 ஆம் தேதி விண்ணப்பித்தது.

அதற்கு முன்னதாக இந்நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 28,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில் இந்த மருந்து 66.6% செயல்திறன் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது என கண்டறியப்பட்டது. மேலும் இவ்வகை மருந்துகள் 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்றும் தெளிவுபடுத்தியது. இருப்பினும், அதன் சோதனை தரவு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த புதிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், இவை இந்தியாவின் இரண்டாவது உள்நாட்டு தடுப்பூசியாக அங்கீகரிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் ஏற்கனவே மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா மற்றும் சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் மற்றும் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் ஆகியவற்றின் மருந்துகளை அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த மருந்துகளுக்கும் ஒப்புதல் கிடைக்கும் இரண்டு மாதங்களுக்குள் தடுப்பூசியைத் செலுத்த தொடங்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பயோடெக்னாலஜி மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கப்படும் ZyCov-D மருந்துகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸில் மூன்று மாதங்கள் வரை சேமிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!