தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஜூம், கூகுள் மீட் முலம் பாடங்கள்!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களால் ஸ்மார்ட் போன்கள் வாங்கி ஆன்லைன் வகுப்புல பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களும் தடையின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் அரசு கல்வித் தொலைக்காட்சியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அனைத்து வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் தொடர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.
புதுச்சேரி பல்கலை நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!
இந்த நிலையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வழியாக பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு அதில் பாடங்கள் வீடியோக்களாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. சில பள்ளிகளில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 முதல் 12 ம் வகுப்புகளுக்கு ஜூம், கூகுள் மீட் முலம் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை அனைத்து பாடங்களுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. 9 ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு பாடம் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் 60 முதல் 70 சதவீதம் மாணவர்களின் வருகை உறுதி செய்யப்படுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பாட வேளையை 30 முதல் 45 நிமிடம் வரை பாடங்களுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.