முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – குறைந்த கொரோனா நோய்த்தொற்று பரவல்!
சீனாவின் ஷாங்காய் நகரம் தற்போது ‘ஜீரோ-கோவிட்’ பாலிசியை அடைந்து விட்டதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அங்கு அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கொரோனா தொற்று நோய் பரவல் தொடக்கத்திலிருந்து மோசமான விளைவுகளை சீனா எதிர்கொண்டது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்த காரணத்தால் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அதிக எதிர்ப்புகளையும், சண்டைகளையும் தூண்டியது. ஷாங்காயின் அனைத்து 16 மாவட்டங்களும் ஏற்கனவே “பூஜ்ஜிய-கோவிட்” ஐ அடைந்துள்ளன என்று ஷாங்காய் சுகாதார ஆணைய அதிகாரி ஜாவோ தண்டன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு – காவல்துறை நடவடிக்கை!
மே 17 அன்று ஷாங்காய் அதன் அனைத்து மாவட்டங்களிலும் “பூஜ்ஜிய-கோவிட்” அடைந்ததாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், செவ்வாயன்று பதிவு செய்யப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகளில் எதுவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே கண்டறியப்படவில்லை என்று நகர அதிகாரிகள் தெரிவித்தனர். துணை மேயர் சென் டோங் ஞாயிற்றுக்கிழமை அன்று, நகரத்தில் இந்த வாரம் தொடங்கி படிப்படியாக வணிக செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்று கூறினார். ஆனால் ஷாங்காயில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்பு வளாகங்களை விட்டு வெளியேற முடியவில்லை.
Exams Daily Mobile App Download
புள்ளிவிவரங்களின்படி, 3.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதிகாரப்பூர்வமாக நகரத்தில் கடுமையான ஊரடங்கின் கீழ் உள்ளனர். மோசமான சில்லறை விற்பனை, வீடு மற்றும் கார் விற்பனை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றின் பொருளாதாரச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், “பூஜ்ஜிய-கோவிட்” ஐ பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை சீனா அரசு மேற்கொண்டு வருகிறது. தலைநகரில் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் பல்கலைக்கழக வளாகங்களில் கடுமையான கோவிட் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.