தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜீரோ கவுன்சிலிங்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுகள் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் கலந்தாய்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த ஆண்டு நடைபெற இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அக்டோபர் 12ம் தேதி முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை போன்ற அனைத்து பணியிடங்கள் காலிப்பணியிடமாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
12 முதல் 17 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – புதிய திட்டம்!
தற்போது திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்டதை போன்று பள்ளி ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்றும் ஆசிரியர்கள் கலந்தாய்விற்கான கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது என்றும், துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.