முடிவுக்கு வரும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் – வெளியான தகவல்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற “செம்பருத்தி” சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
செம்பருத்தி சீரியல்:
ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகிக் கொண்டே போனது. அதற்கு கதைக்களம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் நடிக்கும் நடிகர்களும் கதாபாத்திரமாக வாழ்ந்து வருகின்றனர். நடிகர்களை பிடித்ததால் தான் தொடர்ந்து இந்த சீரியலை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். முதலில் நடிகர் கார்த்திக் இருக்கும் போது இந்த சீரியல் டாப் வரிசையில் இருந்தது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி? அவரே வெளியிட்ட பதிவு!
அதன் பின் ஹீரோ மாற்றப்பட்டதால் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் வட்டரம் குறைந்து விட்டது. இருந்தாலும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானா, முன்னணி நடிகை பிரியா ராமன் ஆகியோர் நடிப்பதால் இந்த சீரியல் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது முடிவிற்கு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதைப்பற்றி சீரியல் டீம் இன்னும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சீரியலில் திருப்புமுனையை வைத்தும் அடுத்ததாக அதில் நடக்கும் வரப்போகும் எபிசோடுகளை வைத்தும் தான் ரசிகர்கள் இந்த அளவுக்கு கருத்துகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். காரணம் காட்சிகள் அதற்கேற்ப மாறி வருகின்றன.
TN Job “FB Group” Join Now
எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அதில் அகிலாண்டேஸ்வரி நந்தினியை துப்பாக்கியால் சுட்ட பிறகு அவர் இறந்து விட்டாரா அல்லது உயிரோடு தான் இருக்கிறாரா என்று ஒரு பெரிய பிரச்சனையே போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்தினியின் உடலை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அவருடைய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்னவாக இருக்கும் என்று வனஜா, ஆதி, பார்வதி என எல்லோரும் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் பார்வதி கையில் ரிப்போர்ட் கிடைத்து விடுகிறது. அதில் நந்தினியின் இதயத்தில் குண்டு பாய்ந்து அவர் இறந்திருப்பதாக ரிப்போர்ட்டில் இருக்கிறது. ஆனால் இதை கேட்டதும் அகிலாண்டேஸ்வரி ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். இவ்வாறு பல பரபரப்புடன் இந்த சீரியல் தற்போது சென்று கொண்டிருக்கிறது.