ஜீ தமிழ் ‘சித்திரம் பேசுதடி’ சீரியல் ஜோடிக்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சீரியல்களில் கலக்கி வரும் நடிகை அபி நவ்யாவிற்கு, தனது காதல் கணவர் தீபக் உடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், தேதி முடிவாகி விட்டதாகவும், தனது இன்ஸ்டா பக்கத்தில் நிச்சய வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
சீரியல் நடிகை திருமணம்:
தமிழ் சின்னத்திரையில் பிரபலங்கள் பலர் சீரியல்களில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் திருமணம், என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி ஆகிய சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் அபி நவ்யா மற்றும் தீபக். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாபாத்திரங்களிலும் நடித்தார். இரு கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு – மாலை நிலவரம்!
அதன் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சேனல் சீரியலில் நடிக்கும் தீபக்குமாரை கடந்த ஓராண்டாக காதலிக்கும் அவர், அண்மையில் தங்களது காதல் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மேலும் காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தற்காலிக அரசு ஊழியர்களும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு பெறலாம் – தமிழக அரசு!
அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இருவரும் இணைந்து மண வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திருமண தேதியும் முடிவாகி விட்டதால், விரைவில் டும் டும் கொட்ட உள்ளது. ஏற்கனவே பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, அனிதா சம்பத், திவ்யா துரைசாமி என செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நுழைந்தவர்கள் வரிசையில் தற்போது அபி நவ்யாவும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.