ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து விலகிய ப்ரியா ராமன்? ரசிகர்கள் அதிர்ச்சி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியா ராமன் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்பருத்தி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்பத்தில் வீட்டு வேலைக்கார பெண்ணாக தோன்றும் பார்வதி பிறகு அந்த வீட்டிற்கே மருமகள் ஆகிறாள் இதை வைத்து கதை நகருகிறது. ஆதி – பார்வதியின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மனதை கவர்ந்தது. அதிக ரசிகர்களை பெற்றுள்ள இந்த சீரியலில் இருந்து முன்னணி கதாபாத்திரகள் வெளியேற தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த சீரியலின் நாயகன் ஆதி வெளியேறினார்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – டாப் சீரியல் கமெண்ட்கள்!
அவருக்கு பதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அக்னி வந்தார். அதன் பிறகு மக்களிடம் சீரியல் ரீச் ஆகவில்லை அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா ஷாம் , உமா போன்ற கதாபத்திரங்களும் விலகினர். அதனை தொடர்ந்து முதன்மை கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரி செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலின் கதைபடி தற்போது அவர் சிறையில் இருக்கிறார். கடந்த மாதங்களில் எபிசோடில் அவர் சிறையில் இருந்த காட்சிகள் ஒளிபரப்பட்டது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் ஒரு நாள் சம்பளம் – CWC பிரபலம் பேட்டி!
ஆனால் தற்போது ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரமான பிரியா ராமன் திரையில் தோன்றுவதே இல்லை. அவற்றுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த வார எபிசோடுகளில் பார்வதி ஷாம், ஆதி போன்றோர்கள் இணைந்துள்ள காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது. இதனால் நடிகை பிரியா ராமன் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.