முன்னணி சீரியலில் விலகிய மெயின் ஹீரோயின்.. அவருக்கு பதில் இனி இவர் – எந்த சீரியல் தெரியுமா?
சமீப காலமாக அதிக அளவிலான நடிகை, நடிகர்கள் தாங்கள் நடித்து வரும் சீரியல்களில் இருந்து ஏதாவது காரணத்தை சொல்லி விலகி வருகின்றனர். அந்த வகையில் முக்கிய ஹீரோயின் ஒருவர் விலகுவதாக தெரிவிக்கப்பட்ட சீரியலில் புதிய நாயகி களம் இறங்க உள்ளார்.
ஹீரோயின் மாற்றம்:
தற்போது அனைத்து சேனல்களிலும் வித விதமாக புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இவை அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை. ஆனால் மக்கள் மனதை வென்ற சீரியல்கள் எப்போதும் TRP ரேட்டிங்கில் பின்னடைவை சந்திப்பதில்லை. காரணம் மக்கள் கதையுடன் ஒன்றிவிடுவதால், அதனை தொடர்சியாக ரசிக்க தொடங்கி விடுகின்றனர்.
ட்விட்டர் 2.0 The Everything App – அம்சங்கள் என்ன? எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு!
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் தான் சமீபத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 2 வது மகளாக நடித்து வந்த மோக்ஷிதா தனிப்பட்ட காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகுவதாக முன்னதாகவே தெரிவித்துவிட்டார். இந்நிலையில், இவர் நடித்து வந்த சக்தி கதாபாத்திரத்தில் இனி தெலுங்கு சீரியல் நாயகி சௌந்தர்யா ரெட்டி தான் நடிக்க உள்ளார். இவர் இந்த கதாபாத்திரத்தில் பொருந்தக்கூடிய அமைப்பில் உள்ளார். இதனால் இனி மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நாம் புதிய சக்தியை பார்த்து ரசிக்கலாம்.