“வானத்தை போல” சீரியலில் சின்ராசுவாக களமிறங்கிய ஜீ தமிழ் பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக “வானத்தை போல” சீரியலில், துளசி கதாபாத்திரம் மாற்றப்பட்டதை தொடர்ந்து, சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தமன் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஜீ தமிழ் சீரியல் நடிகர் ஒருவர் களமிறங்கி இருக்கிறார்.
வானத்தை போல:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. காலை முதல் மாலை வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், மக்கள் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் தான் TRPயில் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் சன் டிவி சீரியல்கள் என்றாலே மக்களிடம் தனி இடம் இருக்கிறது. அதில் அண்ணன் தங்கையை மையக்கதையாக கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல் தான் “வானத்தை போல” சீரியல். இந்த சீரியலில் பாசக்கார அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வந்தார்.
‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை! வைரலாகும் பதிவு!
மேலும் அண்ணன் மீது பாசம் வைத்த தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் நடிகை ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.அவருக்கு பதிலாக மன்யா ஆனந்த் என்ற புதுமுக நடிகை களமிறங்கி நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்து ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமார் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு முக்கிய கதாபாத்திரங்களும் சீரியலில் இருந்து விலகியதால் சீரியல் நிறுத்தப்படுமா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீ குமார் களமிறங்கி இருக்கிறார். தற்போது அவர் ஜீ தமிழ் தொடர்களில் நடித்து வரும் நிலையில் சன் டிவிக்கு வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.