இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் – என்.வி.ரமணா பரிந்துரை!
இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் என்.வி.ரமணாவின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை பரிந்துரை செய்துள்ளார்.
தலைமை நீதிபதி:
இந்தியாவின் 48 ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா தற்போது பதவியில் இருந்து வருகிறார். மேலும் என்.வி.ரமணாக்கு முன்பாக தலைமை நீதிபதியாக எஸ்ஏ.போப்டே இருந்து வந்தார். இவரின் ஓய்விற்கு பின்னர் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 2021ல் என்.வி.ரமணா இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இதனிடையே, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இதற்கு பிறகு இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
இதனிடையே, மத்திய சட்டத்துறை அமைச்சர் தலைமை நீதிபதியான என்.வி.ரமணாவிற்கு அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். தற்போது உதய் உமேஷ் லலித் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். மேலும்,யு.யு.லலித் இதுவரைக்கும் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளையும் வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் தங்கும் விடுதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இது மட்டுமல்லாமல் ‘முத்தலாக்’ முறை மூலமாக விவாகரத்து செய்யும் நடைமுறை உட்பட பல தீர்ப்புகளை யு.யு.லலித் வழங்கியிருக்கிறார். மேலும், போக்ஸோ சட்டத்தின் கீழ் பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். மேலும்,வழக்கறிஞராக இருந்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதிவியேற்றம் பெற்ற முதல் வழக்கறிஞர் ஆவார். இதையடுத்து, என்.வி.ரமணாவின் பதவி காலம் நிறைவடைந்த பிறகு உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பதவி ஏற்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.