மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளைஞர் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளைஞர் விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளைஞர் விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் இளைஞர் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இளைஞர் விருது:

ஒருவரின் சிறப்பான சமூகம் சார்ந்த பொது பணிக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் வழங்குவதன் மூலம் அந்த நபர் ஊக்கம் பெற்று அடுத்தடுத்த உயரிய பணிகளை மேற்கொள்வார். அந்த வகையில் மத்திய, மாநில அரசுகள் சமூகத்தில் பொது பணி ஆற்றுபவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் நாட்டில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. வீரதீர செயல்கள் புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. இப்படி பல விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் பரவும் புதிய வகை நோரோ வைரஸ் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இதன் தொடர்ச்சியாக சமுதாய நலனுக்காக நலபணிகள் புரியும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் விளையாட்டுத் துறை மூலம் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சமூக சேவை செய்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த விருது பெற விரும்புவோர் சமூக நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

சிவகங்கையில் நாளை (நவ.14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

அவர் செய்த தொண்டு மதிக்கதக்கதாகவும், கண்டறியப்பட கூடியதாகவும், அளவிடப்பட கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிபவராக இருக்க கூடாது. விருது பெற விண்ணப்பிப்போர் 15 வயது முதல் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தேசிய இளைஞர் விருது பெறும் 25 பேருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பதக்கமும் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் பெயர், புகைப்படம், முகவரி, உரிய சான்றுகள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!