தமிழகத்தில் ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட் பெறலாம் – Passport அதிகாரி தகவல்!!
தமிழகத்தில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மதுரை மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார்.
தட்கல் பாஸ்போர்ட்:
தமிழகத்தில் கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று தீவிரமெடுத்து பரவியது. அத்தகைய சூழலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தியாவில் தொற்று அதிகரித்ததன் காரணமாக கனடா, பாகிஸ்தான் அரபு நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது.
தமிழகத்தில் ஜன. 28 ம் தேதி மின்தடை செய்யப்படும் ஏரியாக்களின் விவரங்கள் .. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து பாஸ்போர்ட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை மண்டலம் வாயிலாக மட்டும் தினமும் 1000க்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2,27,811 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.2000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை மண்டலத்தில் சரியான ஆவணங்கள் இல்லாததால் 6,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.