தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – அக்.10 கடைசி நாள்!
இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி ஆணையரகம் வெளியிட்ட அறிவிப்பின் படி மருந்தாளர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயபடிப்பிற்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில் சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் மெடிக்கல் பள்ளிகளில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான 2 ஆண்டு பட்டயப்படிப்பான ஒருங்கிணைந்த பாரா ஆண்டுகள் மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 26.09.2023 முதல் 04.10.2023 மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in என்ற இனையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்பபடிவதற்கு ரூ.350 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை ஆணையரகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600 106 என்ற முகவரிக்கு 04.10.2023 மாலை 5 மணிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.