தமிழக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் “சிற்பி” திட்டம் – 5,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி!!

0
தமிழக பள்ளிகளில் அமல்படுத்தப்படும்
தமிழக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் "சிற்பி" திட்டம் - 5,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி!!
தமிழக பள்ளிகளில் அமல்படுத்தப்படும் “சிற்பி” திட்டம் – 5,000 மாணவர்களுக்கு யோகா பயிற்சி!!

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக உதவும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்னும் திட்டம் நடத்தப்பட்டது.

‘சிற்பி’ திட்டம்:

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்துவதற்காகவும், அவ்வாறு தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களை கவருவதற்காவும் புதிய திட்டங்கள் சமீப காலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம் இன்று மாலை பேச்சுவார்த்தை – அமைச்சர் பேட்டி!!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், தற்போது சென்னை மாநகர காவல் துறை சார்பில், சென்னையில் உள்ள 100 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 5,000 மாணவர்களை தேர்வு செய்து ‘சிற்பி’ திட்டத்தின் கீழ் யோகா பயிற்சி அளிக்க திட்டமிட்டிருந்தது. அதன்படி, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று இத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கான இந்த திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வந்தனர்.

மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமலும் , போதை மருந்து போன்ற தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடாமலும் தடுத்து, அவர்களை கல்வி மற்றும் நல்லொழுக்க பாதையில் சிந்திக்க உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!