அடுத்த 3 நாட்களுக்கு “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை – குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!

0
அடுத்த 3 நாட்களுக்கு
அடுத்த 3 நாட்களுக்கு "மஞ்சள் அலர்ட்" எச்சரிக்கை - குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!
அடுத்த 3 நாட்களுக்கு “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை – குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை!

குஜராத்தில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை:

குஜராத் மாநிலத்தில் பரவலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள், சாலைகள் என பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிகாலம் நிறைவு – யு.யு.லலித் பதவியேற்பு!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கூற்றுப்படி , குஜராத் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (நேற்று ) முதல் வருகிற செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5-9) வரை இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த கணிப்புகளைக் கருத்தில் கொண்டு “மஞ்சள் அலெர்ட்” விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பருவமழை தொடங்கியதில் இருந்து, குஜராத்தில் 542.8 மி மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஞாயிறு, ஆகஸ்ட் 7: அம்ரேலி, ஜுனகர், கிர் சோம்நாத், நவ்சாரி, வல்சாத் ஆகிய இடங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 8: அம்ரேலி, பாவ்நகர், ஜுனகர், கிர் சோம்நாத், சூரத், தபி, டாங்ஸ், நவ்சாரி, வல்சாத் ஆகிய இடங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், ஆகஸ்ட் 9: அம்ரேலி, ஜுனகர், கிர் சோம்நாத், நவ்சாரி, வல்சாத் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; ராஜ்கோட், போர்பந்தர், பாவ்நகர், பருச், சூரத், வதோதரா, சோட்டா உதேபூர், நர்மதா, தபி, டாங்ஸ் ஆகிய பகுதிகளில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!