தொடர்ந்து பெய்து வரும் கனமழை, கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ‘Yellow’ அலர்ட் – வானிலை அறிவிப்பு!
ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை வரைக்கும் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் கேரளா மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது, இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணை, முல்லை பெரியாறு அணை, இடை மலையாறு அணை, பாணாசுர சாகர் அணை, கக்கி அணை மற்றும் பம்பா அணை போன்ற அணைகளில் ஆறுகளின் உபரி நீர் வந்து கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால், அணை நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் அணைகளில் பாதுகாப்பு கருதி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அணை பகுதிகளில் யாரும் குளிக்கவோ, நடமாடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒடிசா கடற்கரை பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால், கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவுறுத்தல்
மேலும், நாளை வரைக்கும் கேரளாவின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவின் கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.