மாநிலம் முழுவதும் ‘மஞ்சள்’ அலர்ட் எச்சரிக்கை – கனமழை எதிரொலி!
மாநிலம் முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் இன்று (ஜூலை 15) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழைக்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி இருக்கிறது.
மஞ்சள் அலர்ட்
கேரளா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரும் சில நாட்களுக்கு மாநிலத்தில் கனமழையுடன் சேர்த்து அதிவேக காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஆறு மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கேரளாவின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மலபார் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த ஆரஞ்சு அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 6 செ.மீ முதல் 20 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை முதல் மிக கனமழை பெய்வதை குறிக்கிறது. இப்போது வடக்கு கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் ஆறுகள் நிரம்பி வழிவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஜூலை 30ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்பதிவு துவக்கம்!
மேலும், இந்த வார தொடக்கத்தில் இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேஜஸ்வினி மற்றும் மதுவாஹினி ஆறுகள் நிரம்பியதால் காசர்கோடு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கூடலூர் மற்றும் நாடுகாணி பகுதியில் கனமழை பெய்து வருவதால் புன்னப்புழா, காரக்கோடன், களக்கான் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மலப்புரம் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் கோழிக்கோடு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.