ஜீ தமிழ் ‘யாரடி நீ மோஹினி’ சீரியல் கிளைமாக்ஸ் – ரசிகர்கள் கையில்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதல் ஒளிபரப்பாகி வந்த “யாரடி நீ மோஹினி” சீரியல் தற்போது முடிவடைய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
“யாரடி நீ மோஹினி” சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து “யாரடி நீ மோஹினி” என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து பேய் தொடராக ஒளிபரப்பாகும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. பின், கதையில் பல விறுவிறுப்பான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் இந்த தொடரை விரும்பி பார்த்து வந்தனர். இப்படியாக இருக்க, இந்த சீரியலின் இரண்டாவது பாகம் கூடிய விரைவில் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இது ஒரு புறம் இருந்தாலும், இந்த சீரியலின் கிளைமாக்ஸ் எவ்வாறாக அமைக்கப்படும் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இதனை அடுத்து இந்த சீரியல் கூடிய விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியானதால் சீரியலின் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இப்படியான சூழலில் ரசிகர்களுக்கு அந்த சீரியல் குழுவினர் கிளைமாக்ஸ் குறித்து மூன்று சாய்ஸ் வழங்கி உள்ளனர். இதில் அதிக ஓட்டுக்கள் எந்த சாய்சுக்கு வழங்கப்படுகிறதோ அதன்படி கதையின் கிளைமாக்ஸ் அமைக்கப்படும் என்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
சீரியலின் வில்லி கதாபாத்திரமான ஸ்வேதா மன்னித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? அல்லது வெண்ணிலாவால் பழிவாங்கப்பட வேண்டுமா? அல்லது சித்ராவின் ஆவியினால் பழிவாங்கப்பட வேண்டுமா? என்று மூன்று சாய்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.