தீ விபத்தில் சிக்கிய “யாரடி நீ மோஹினி” சீரியல் ஸ்ரீகுமார் – மீண்டது எப்படி? உணர்ச்சிகரமாக பேட்டி!
ஜீ தமிழ் “யாரடி நீ மோஹினி” சீரியல் மூலமாக பிரபலமான நடிகர் ஸ்ரீகுமார். நேற்று சர்ச்சில் தீ விபத்தில் சிக்கியது குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகுமார்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பண்டி பஜாரில் ஒரு சர்ச் ஒன்றில் ஞாயிறு பிராத்தனை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அங்கே தீ விபத்து ஏற்பட்டது. 80ற்கு மேற்பட்டவர்கள் இருந்த நிலையில் திடீரென தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விபத்தில் நடிகர் ஸ்ரீகுமார் அவரது தாயாருடன் சிக்கினார். அவர் ஜீ தமிழ் “யாரடி நீ மோஹினி” சீரியலில் முத்தரசு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை இடிக்கப்போகும் அதிகாரிகள் – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
அவர் தற்போது சன் டிவியில் “வானத்தை போல” சீரியலில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்த விபத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில் அது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர் பிராத்தனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தீ பற்றிக் கொண்டது அப்போது அவர் எல்லாரையும் மாடிக்கு கூட்டிக் கொண்டு வந்து விட்டு பின் தண்ணீரை திறந்துவிட்டாராம்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 பரத்தை தாக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் புகைப்படம்!
அதன் பின் பக்கத்தில் இருப்பவர்கள் கல்லை தூக்கி எறிந்தார்களாம் அதனால் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் தீ சற்று குறைந்ததாம். பின் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததாக சொல்கிறார். பின் அந்த விபத்தில் பிரசவ முனையில் இருக்கும் ஒரு பெண், என் அம்மா இதய நோயாளி ஆகியோர் இருந்தனர். ஆனால் எல்லாரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டதாக சொல்கிறார்.