தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ள 11 மாவட்டங்களில் ஜெராக்ஸ் கடைகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் குறைந்த அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 11 மாவட்டங்களில் ஜெராக்ஸ், கணினி மையங்களை திறக்க அனுமதி வழங்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணினி மையம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கோவை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த 11 மாவட்டங்களில் குறைந்த அளவில் தளர்வுகள் வழங்கி, கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் 11 மாவட்டங்களுக்கு காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை கடைகள் திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சார்பதிவாளர் அலுவலகமும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வுகள் – அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் ஜெராக்ஸ், பத்திர பதிவுகள் மேற்கொள்ள தேவைப்படும் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்க மக்கள் திணறி வருகின்றனர். காரணம் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் ஜெராக்ஸ், கணினி, தட்டச்சு மையம் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது ஜெராக்ஸ் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரி ராசிபுரம் தாலுகா ஜெராக்ஸ் கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ரத்தினம் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அவர் தெரிவித்ததாவது, பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட துறைகளுக்கு ஜெராக்ஸ் சேவை மிக அவசியமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக வீட்டுடன் இணைந்துள்ள ஜெராக்ஸ், கணினி, தட்டச்சு மையங்களை பிற்பகல் 2 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.