தமிழகத்திலும் XE வகை வைரஸ் – மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் அளித்த விளக்கம்!
தற்போது தான் தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் XE என்னும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவிவிடுமோ எனவும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ எனவும் மக்கள் பீதியில் உள்ளனர்.
XE வகை வைரஸ்:
உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான மக்களும் பலியாயினர். அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், அவசியமில்லாமல் பொது இடங்களில் நடமாட வேண்டாம் எனவும், மாஸ்க் அணிந்து தான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
தேர்வில்லாமல் ரூ.40,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
அரசின் இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், மக்கள் அனைவரும் அரசின் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றியதால் தான் கொரோனா தொற்று தமிழகத்தில் குறைய ஆரம்பித்திருக்கிறது. கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மக்கள் அனைவருமே தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
பிஏ1 மற்றும் பிஏ.2 ஆகிய இரு கொரோனா வைரஸும் கலந்து XE என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. மற்ற வைரஸ்களை விட XE வைரஸ் வீரியம் மிக்கதாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எக்ஸி வகை வைரஸ் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. அதற்கு பிறகு இந்தியாவிலும் முதன்முதலாக குஜராத்திலுள்ள முதியவர் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அதுவும் இந்த XE வகை வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தினால் தமிழகத்திலும் பரவி விடுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவின் நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். தற்போது வரை தமிழகத்தில் XE வைரஸ் கண்டறியப்படவில்லை. இதனால், மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.